இம்பால், ஆக. 19- பாஜகவின் இனவெறி அரசியல் வன்முறையால் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ள மணிப்பூருக்கு சென்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார். பாஜகவின் வகுப்புவாத அரசிய லால் பற்றி எரியும் வடகிழக்கு மாநில மான மணிப்பூருக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தலைமையில், கட்சியின் திரிபுரா மாநிலச் செயலாளர் ஜிதேந்திர சவுத்ரி, அசாம் மாநிலச் செயலாளர் சுப்ரகாஷ் தாலுக்தார், மத்தியக்குழு உறுப்பினர் தேப்லினா ஹேம்ப்ராம் ஆகிய 4 பேர் கொண்ட குழு வெள்ளியன்று சென்றடைந்தது. அங்கு வன்முறையால் பாதிக்கப் பட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்த சீத்தாராம் யெச்சூரி, மொய்ராங், சுராசந்த்பூர் ஆகிய இடங்களில் உள்ள முகாம்களுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து நிவாரண உதவிகளை வழங்கினார்.
முதல்வரை பதவி நீக்க வேண்டும்
நிவாரண முகாம்களை பார்வை யிட்ட பின்பு செய்தியாளர்களை சந்தித்த சீத்தாராம் யெச்சூரி கூறியதாவது,” மணிப்பூர் மாநிலத்திலும், ஒன்றியத்தி லும் பாஜகவின் “இரட்டை எஞ்சின்” அரசாங்கம் உள்ளதால், மணிப்பூரில் தற்போதைய நிலைமைக்கு பாஜகவே முழுப் பொறுப்பு ஏற்கவேண்டும். இயல்புநிலையை மீட்டெடுப்பதில் தேவையான அனைத்தையும் செய்ய நாங்கள் மணிப்பூரில் இருக்கிறோம். ஆனால் வன்முறை நீண்ட காலமாக நடந்து வருகிறது. இதை இப்படியே தொடர அனுமதிக்கக் கூடாது. முக்கிய மாக மணிப்பூர் முதல்வர் என்.பைரேன் சிங் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார். கடந்த 4 மாதமாக வன்முறையால் உருக்குலைந்துள்ள மணிப்பூருக்கு பிரதமர் மோடி இன்னும் செல்லாத நிலையில், கடந்த மாதம் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, எதிர்க்கட்சிகளின் “இந்தியா” கூட்டணியைச் சேர்ந்த 21 பிரதிநிதிகள் கொண்ட குழுவும், கடந்த வாரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பின ரான பிருந்தா காரத் தலைமையிலான மாதர் சங்கத்தினர் 3 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழுவும் பார்வையிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
முகாம்களை மேம்படுத்துக!
நிவாரண முகாம்களை மேம்படுத்த வேண்டும் என மணிப்பூர் ஆளுநரிடம் சீத் தாராம் யெச்சூரி கோரிக்கை விடுத்தார். மணிப்பூரின் மொய்ராங், சுராசந்த்பூர் ஆகிய இடங்களில் உள்ள நிவாரண முகாம்களை பார்வையிட்ட பின்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி அம்மாநில ஆளுநர் அனுசுயா உய்கேவை சந்தித்து மணிப்பூர் உண்மை நிலைமையை எடுத்துரைத்தார். சுமார் ஒருமணிநேரத்திற்கு மேலாக நீடித்த இந்த சந்திப்பின் பொழுது,”மணிப்பூர் நிவாரண முகாம்களில் உள்ள மோச மான நிலைமைகள் மேம்படுத்தப்படு வதை உறுதி செய்வதில் தலையிட வேண்டும்” என சீத்தாராம் யெச்சூரி ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தார்.